Saturday, November 5, 2011

கடவுளைக் காணல்


மீண்டும் ஒரு முறை
எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றம்
உன் வலியை உள் வலியை
உணர்கையின் என்னைக் காண்பாய் என்றார்.
வலி உண்டாக்கி தருணத்தை
விவரிக்க சொன்னார்.
தெருவில் நடந்து செல்பவனை
அப்பா என்று எனது மகள்
முதல் முறையாய் அழைத்ததை
செவிலித் தாய் சொன்ன போது
என்றேன்.
பதில் அளித்த தருணதில்
உண்ர்ந்தேன் கடவுளை.

No comments: