காலத்தின் மாற்றத்தில்
தருமனாகி யஷ்ஷனிடம்
நிபந்தனைகள் அற்று
கேள்வி கேட்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.
மன வலிகளில் வலிமையானது
தாய்மையின் வலியா,
தன்னை இழத்தலா,
அவமானங்களை உள்வாங்கி
அனுபவம் பெறுவதிலா,
பணம் அற்ற பொழுதுகளில்
உணரப்படும் பசியா
எது என்றேன்.
யஷ்ஷனின் விழித்துளிகளில்
விடைக் கிடைத்தது.
No comments:
Post a Comment