ஏதோ சில கணங்கள்
உணர்தின
எனக்கான மரணத்தினை.
மல ஜலம் கழிதலும்
மாறுபட்ட சுவாசமும்
மாற்றமின்றி நிகழ்ந்தன.
காயம் பட்ட மனிதர்கள்
பழி தீர்க்க கண நேரத்தில் வரிசையாய்.
காசினியில் கொண்ட கொள்கைகள்
காட்டைத் தாண்டுமோ!
எரியுட்டப் படுகையினில்
எல்லோரும் பிறிதொருநாளில்
அறியக் கூடும்
எல்லா மரணங்களும்
நிகழ்வுகளை இடம் மாற்றி
நிச்சய குறிப்பொன்றை எழுதிக் செல்வதை.
No comments:
Post a Comment