Tuesday, July 2, 2013

மிலேச்ச தேசம்

ஒருபுள்ளியில் உருவம் அற்று
வெற்றிடத்தில் வேண்டுவன தந்து
தவித்து, தனித்து
நிழலாடி
கனவினை விதைக்கிறது
உன் வரைபடங்கள்.
எண்ணப் பகிர்தலுக்கு
எதிர் அணியில் நான்.
காட்சிகள் கவிதையாக்கம்
கொள்கின்றன.
எட்டும் தூரத்தில் ஒரு குரல்
'கட்டைல போறவன்
தின்னுட்டு சாமி கும்பிட வேண்டியதுதானே'




*மிலேச்ச தேசம் - மரபுகளைக் கைவிட்ட தேசம்

No comments: