Sunday, August 18, 2013

முடிவற்ற தேடல்கள்

பெருங்கூட்டமொன்று
கூடிக் கலந்து தேடிக் கொண்டிருந்தது.
ஒருவன் தான் தொலைத்த பணத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த புகழைத்
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த குடும்பத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த சந்தோஷங்களை
தேடுவதாகச் சொன்னான்.
கிடைத்த காலவெளியில்
அவரவர் தொலைந்தது கிடைத்ததாக உரைத்தார்கள்.
ஊழி ஓட்டத்தில் ஒருவன் வந்து
உரை பகன்றான் எதைத் தேடுகிறாய் என்று.
என்னைத் தேடுவதாக உரைத்தேன்.
கண நேரத்தில் கூட்டம் கலைந்திருந்தது
'அவன் கிறுக்கு பயல் என்று'

6 comments:

Yaathoramani.blogspot.com said...

என்னைத் தேடுவதாக உரைத்தேன்.
கண நேரத்தில் கூட்டம் கலைந்திருந்தது
'அவன் கிறுக்கு பயல் என்று'//

மனம் கவர்ந்த அருமையான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

GVK said...

Would like to see an exhibition of your photos in a gallery. Maybe, it's a bit late to do so in the current Madras Week celebrations being organised by friend Vincent D'Souza.

அரிஷ்டநேமி said...

கருத்துப் பதிவிற்கு நன்றி.

அரிஷ்டநேமி said...

Sure GVK.

sushmitha said...

Aruputhamana varigal :)

அரிஷ்டநேமி said...

Thanks Sushmitha