பிறப்பொன்று நிகழ்ந்தது உயிருக்கு.
நிர்வாணத்தின் தன்மை அறியாது
தினமும் வீதியினில் விளையாடிது அக்குழந்தை.
எவரும் அறியா
இரவுப் பொழுதில்
வீதியினை
நனைத்தது மழையொன்று.
நிகழ்வறியாது
விளையாட்டினை
தொடர்ந்தது
அக்குழந்தை.
தொலைவு செல்லும்
வாகனமொன்று
வீதி வழி
சேற்றை
வாரி இறைத்துச்
சென்றது அக் குழந்தைமேல்.
பெருங்கோபமுடன்
மழலையில் கோபச்
சொற்களை
வீசியது.
பின் தொடரும்
வாகனங்களும்
தொடர்ந்தன
அந் நிகழ்வை.
பிறிதொரு
நாளில்
சொற்கள்
அற்று இருந்தது அக்குழந்தை
உடலெங்கும்
சேற்றின் படிமங்களை வாங்கியபடி.புகைப்படம் : சித்திரம் நிழற்படம்
No comments:
Post a Comment