
எல்லா நிலைகளிலும்
வெளிப்படுகின்றன கவிதைகள்.
எண்ண ஓட்டத்திலும்
எதிர் கொள்ளும் வெற்றியிலும்
கவிதைக்கான கருப்பொருள்கள்.
வெற்றியிலும் பாராட்டிலும்
வெறுமைக்கான நிமிடங்களிலும்
சந்தோஷத்தின் சாயல் காட்டும்
சக தர்மினியிடமும்
உணர்வுகளை உள்வாங்க
துவங்கிய வேலைகளில்
உள்ளிருந்து ஒலிக்கிறது குரல்
நாலு காசு சம்பாதிக்க வக்கிலைனாலும்
நாற்பது பக்கம் எழுதுவாரு உங்கப்பாரு.
No comments:
Post a Comment