Sunday, September 18, 2011

கோபம்


கோபம் கொண்ட தருணங்களில்
கண்களை உருட்டி
கைகளை காட்டி
மிகப் பெரிய மிருகமொன்று
உன்னைக் கவ்விச்செல்லும்
எனும் தருணங்களில்
உங்களை விடவா அப்பா
எனும் மகளின் கேள்விக்கு
என்ன பதில் சொல்வது

No comments: