Tuesday, September 13, 2011

நிஜம்


மனம் விட்டு பேசிய நிமிடங்கள்
மனதில் நிழல் ஆடுகின்றன
கைகோர்த்து நடந்த நிமிடங்கள்
காலங்களோடு கரைகின்றன
உணர்வு கொண்டு
உணவு பரிமாறிய தருணங்கள்
உயிர் வரை ஊடுருவுகின்றன
காலம் கரையேற்றியதா என் மனைவியை
நினைவு உலகத்துள் கேள்வி
எங்கிருந்தோ வந்தது பதில்
எட்டு மணிக்கு தூக்கத்த பாரு உங்கப்பனுக்கு

No comments: