பதில் தேடி புறப்பட்ட
தருணங்களில் எதிர்ப்பட்டார்
என்றைக்குமான கடவுள்.
என்ன வினாக்களோடு பயணம்
என்றார்.
வலிமையானது
காதலா, பசியா என்று
கண்டு உணரப்
புறப்பட்டிருக்கிறேன் என்றேன்.
நீண்ட நெடும் பயணத்திற்கு
பிறகான வழி திரும்புகையில்
ஒன்றில் இடம் பெற வேண்டிய
பெயர் மற்றொன்றில்.
No comments:
Post a Comment