Thursday, January 26, 2012

வாசம்


பாதணிகளை உதறிவிட்டு
ஓடி வந்து மடியினில் அமர்ந்து
உங்களுக்கு பிடித்தது
ரோஜா வாசமா மல்லி வாசமா
என்ற எனது மகளின் கேள்விக்கு
உன் வாசம் என்றேன்.
வியப்புடனான புன்னகையில்
கடை நாள் வரையிலான வாசம்.

No comments: