ஒரு சிறந்த கணத்தில்
நிலம் பெறப்பட்டது.
கட்டிடம் உருவானது
கணப் பொழுதுகளில்.
அனைத்து பொழுதுகளிலும்
உறவினர் கூட்டம்.
களித்த பொழுதுகளையும்
கவிதை பொழுதுகளையும்
சந்தித்தது அவ்வீடு.
கால மாற்றத்தில்
கரைந்தன காரை சுவர்கள்.
நீண்ட நெடும் பயணத்திற்கு பிறகு
வீட்டின் சுவாசம்
அண்டப் பெருவெளியில்.
காலத்தின் சாட்ஷியாக
கனவுகளையும் கவிதைகளையும்
சுமந்து அவ்வீடு.
No comments:
Post a Comment