உன்னை அறிந்த பொழுதுகள்
உன் பார்வை பட்ட
வினாடியில் என்னுள் மாற்றம்.
நீண்ட நெடிய கேசம்
குழைகள் ஆடும் காதுகள்
அகல நெற்றி
வில்லினை ஒத்த புருவம்
என்றும் தொடரும் பார்வைகள்.
என்றைக்கோ
உன்னை சந்திதிருப்பதாக சொன்னேன்.
ஈரெழு ஜன்மங்களிம்
கிடைக்காத புன்னகையை சிந்தினாய்.
ஒலித்தது என் காதுகளுக்குள் ஓங்காரம்.
No comments:
Post a Comment