Friday, August 24, 2012

புனரபி ஜனனம் புனரபி மரணம்


நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் கடவுளுடன் நேசம்.
கழுத்தை திருப்பி கன்னத்திலான
மகளின் முத்தமும்
கவிதையின் தொடக்கத்திற்கான
மனைவியின் தொடர் வார்த்தைகளும்
தொடரக் காரணம் ஏன்  என்றேன்.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
என்று கூறி இடம் அகன்றார்.

No comments: