Saturday, December 1, 2012

வாழ்விற்குப் பிறகுமான வலிகள்


காலனே,
கொஞ்சம் காலம் கடந்து வா.
புதைப்பதற்கு இடமும் அற்று
எரிப்பதற்கு மின்சாரமும் அற்ற
தேசத்தில் வாழ்கிறோம்.
மானம் கெட்ட தேசத்தில்
வாழ்வு மட்டும் அல்ல
மரணத்திற்கும் பின்னும் வலிதான்.


No comments: