Saturday, December 22, 2012

ஓவியனின் கனவுகள்


வண்ணம் தீட்ட
துவங்கிய தருணத்தில்
வரிசையாக மனிதர்கள்.
சிகையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
முகத்தை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
கண்கள் கலக்கமுற்றிருப்பதாக
சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
ஆடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
நடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
மற்றவர்களுக்கா வரைந்து
முடித்த ஓவியத்தில்
முழுமை பெறாமல் ஓவியமும்
ஓவியனின் கனவுகளும்.

3 comments:

SLK said...

Wonderful thinking...

SLK said...

Wonderful thought

அரிஷ்டநேமி said...

மிக்க நன்றி SLK