Wednesday, January 2, 2013

ஆத்ம நிவேதனம்


உறங்க துவங்கும்
வினாடியில்
பிஞ்சு விரல்களால் என் மேல் எழுதி
என்ன எழுதினேன் என்கிறாய்.
சொர்க்கம் என்றேன்.
நீ விழித்த விழிப்பில்
பல ஜன்மங்களை நிறைவாக வாழ்ந்த
தந்தைகளின் வரிசையில்
முதன்மையாக நான்.

No comments: