அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
விஷம் தடவி
வாளினால் தாக்கும்
பெரும் போரளியியை விட
வார்த்தைகளில் லாவகம் உனக்கு.
இரவினில் பாதி உறக்கத்திலிக்கும்
புல்லினமாய் நான்.
போரின் முடிவினில்,
மரணத்திற்குப் பின்வரும்
மற்றொரு வாழ்வினைப் பற்றி
பேசுகிறாய்.
நான் அற்ற இடத்தில்
எனக்கான எச்சங்கள்
இருந்தால் என்ன, இறந்தாலென்ன என்றேன்.
அப்பொழுதும்
அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
No comments:
Post a Comment