Friday, March 15, 2013

அவித்யா


தூரத்தில் நிலவொளி.
வீசிக் செல்லும் பனிக்காற்று.
குளிர் தவிர்த்தலுக்கான உடைகள்
மெல்லிய விரும்பிய இசை.
காவியம் முதல் காப்பியம் வரை
பேசும் உன் திறமைகள்.
விரும்பிய உணவினை
உண்ணத் தொடங்கி
பேச முற்படுகையில்
ஒலிக்கிறது ஒரு குரல்.
நாஷ்டா துன்ன கூட வராம
தூங்குற உங்கப்பனை
எழுந்திருக்க சொல்லுடா.

No comments: