Friday, May 31, 2013

மகா மாயா

'ஏன் இப்பொழுது மழை
அடிக்கடி பெய்வதில்லை' என்கிறாய்.
வினாக்களோடு என் விழிகள் உயர்வடைகின்றன.
'காகிதக்கப்பல் செய்யக் கற்றுக் கொண்டேன்.
விடுவதற்கு நீர் வேண்டும்' என்று
விழி நீரை இறைக்கிறாய்.
வெப்ப சலனத்தில் இடம் மாறுகின்றன
சந்தோஷ நீர் ஓடைகள் வாழ்வின் முழுமைக்கும்.

2 comments:

Deepa Iyer said...

That is profound. And suits today's situation to the T. Great post.

அரிஷ்டநேமி said...

Thanks for your comments Deepa Iyer.