Sunday, November 15, 2015

மௌனக் கண்ணீர்




உயிர் வாழ்தலில்
மரணம் என்பது இயற்கையானது அல்ல
மரணம் என்பது நிலையானதும் அல்ல
என்று தானே அறிந்த தருணமாக இருக்கலாம்.
அழும் குழந்தையினை தாய் திகட்ட திகட்ட
திட்டுகையில் அறிந்திருக்கலாம்.
'இருந்து உயிர எடுக்கறத்துக்கு போய் தொலைந்திருக்கலாம்'
எனும் மனைவியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
'ஒட்டு பீடி கேட்கிறத்துக்கு உசிர விட்டிருக்கலாம்'
எனும் நண்பனின் வார்த்தைகளில் இருக்கலாம்.
'பணம் இல்லா பயலுகளுக்கு
பணக்கார சாமி எதுக்கு' என்னும் வாசகங்களில் தொக்கி நிக்கலாம்
'ஒரு வேலைய உருப்படியா செய்யத் தெரியல'
எனும் மேலதிகாரியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
நினைவுகளையும் ஏக்கங்களையும்
நித்தமும் தொலைக்கும் தருணங்களாக இருக்கலாம்.
தொக்கி நிற்கும் இளைமையின் வடிங்கங்ளை வாங்கி
கண்ணீரில் கரைதலில் இருக்கலாம்,
யாசகத்துக்கு கையேந்தி
வெற்று கைகளுடன் திரும்புகையில் இருக்கலாம்.
மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு
மீண்டும் மனிதகளுடன் கூடிக் குலாவும் காலமாக இருந்திருக்கலாம்
இன்னும் என்ன இருக்கிறது
மரணம் அறிந்து மரணம் தாண்டி
நித்தமும் உயிர் வாழ்தலில் அதீதத்தின் ருசி

புகைப்படம் :  SL Kumar

6 comments:

SLK said...

புகைப்படத்திற்கு பொருத்தமான வரிகள்... அருமை

அரிஷ்டநேமி said...

மிக்க நன்றி SLK.

Unknown said...

Rmba arumai ah iruku.... Hats off too...

Unknown said...

அருமை. . மிகவும் அருமை. .

அரிஷ்டநேமி said...

நன்றி நடராஜன்

அரிஷ்டநேமி said...

நன்றி நடராஜன்