Tuesday, December 13, 2011

மண்ணின் பசி


பசி கொண்ட மனிதனொருவன்
பல்கி பெருகின மனிதர்களிடம்
யாசகம் பெற்றான்.
பொருள் குவிந்த வேளையில்
புலப்படவே இல்லை
வாழ்வுக்கான சூத்திரங்கள்.
பசி கொண்ட பல மனிதர்களை
உண்ட பின்னும்
மாறாமல் இருக்கிறது
மண்ணின் பசி.

No comments: