Friday, February 3, 2012

காலத்தின் சாட்சி




வந்த நாளைக் கொண்டாடிய
நினைவுகள்.
மனிதர்களை ஏற்றிச்
சுமந்த நினைவுகள்.
உறுப்புகள் உடைந்த போதும்
சரி செய்து சமன்
செய்த மனிதர்களின் நினைவுகள்..
கதவுகளைத் தாண்டி
காலத்தின் சாட்சியாக
கனத்த வலியுடன்
வீட்டின் கடைவழியினில்
பழைய நினைவுகளைச்
சுமந்தபடி சைக்கிள்.



No comments: