Friday, March 18, 2016

அமையும் பேரமைதி


யாரும் அறியா தருணமொன்றில்
நீ உனக்கான நடனத்தை துவங்குகிறாய்.
தாய் பசுவைத் தொடரும்
கன்றாக உன்னைத் தொடர்கிறேன்.
நீ வியப்பு காட்டுகிறாய்
நான் வியப்புறுகிறேன்.
நீ கோவம் கொள்கிறாய்
நான் தவிக்கிறேன்.
நீ கருணை செய்கிறாய்
என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
நீ குற்சை செய்கிறாய்.
நான் அழுகிறேன்.
நீ சாந்தம் கொள்கிறாய்
நான் அமைதியாகிறேன்.
நீ சிருங்காரம் காட்டுகிறாய்
நான் வலிமை பெறுகிறேன்.
நீ அச்சம் கொள்ள வைக்கிறாய்.
நான் மறைந்து கொள்ள இடம் தேடுகிறேன்.
நீ வீரம் காட்டுகிறாய்.
நான் எதிர்க்கிறேன்.
நீ புன்னைக்கிறாய்.
கணத்தின் தொடக்கத்தில்
'நான்' அழிந்திருந்தேன்.

*குற்சை - இழிவுச்சுவை
நவரசங்கள் முன்வைத்து  - ஒன்பது வகையான பாவங்கள்.

புகைப்படம் : இணையம்

No comments: